Wednesday, March 31, 2010

நேற்றைய நினைப்புக்கள்

யாருமில்லாத சூன்யத்தில்
தன் இருப்பை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது
பாழடைந்த வீடு!

எழுத உட்காந்து கண் மூடி யோசித்து
முனிவனாகும் போதெல்லாம் வரமறுக்கிறது
கவிதை

மூன்றாவது வாரமாய் பார்க்கிறேன்
இன்றும் காணவில்லை
bus stand பிச்சைகாரனை

சாலையோர சுவரில் யாரோ ஒருவன் சிரிக்கிறான்
கறுப்பு வெள்ளையில்
- மரண அறிவித்தல்

எப்பொழுதெல்லாம் எழுத நினைக்கிறேனோ
அப்பொழுதெல்லாம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது
அவமானப்பட்ட தருணங்கள்!

கடந்து போனவர்கள்

free counter

நான்....

My photo
Colombo, Sri Lanka
மனசுக்குள் ஒரு சாத்தான் அது மெல்ல வளர்ந்து விஸ்வரூபம் எடுக்க துடிக்கிறது.... நடிக்கிறது! அந்த காட்சி குழப்பத்தில் மனசும் கொஞ்சம்தான் கிறங்கி போகிறது! இன்றோ, நாளையோ... நான் ஒரு துரோகி! அல்லது நேற்றாகக்கூட இருந்திருக்கலாம்!

கூடவே வருபவர்கள்